20 ஓவர் உலக கோப்பையில் இன்று நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்– இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்த நிலையில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் அடிப்பேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
                               

                                    20 ஓவர் உலக கோப்பையில் சதம் அடிப்பேன்: கிறிஸ்கெய்ல்

என்னால் எந்த சூழ்நிலையிலும் சதம் அடிக்க முடியும். சிறப்பாக பந்து வீசவும் முடியும். இந்த உலக கோப்பையில் சதம் அடிப்பேன் என்று நம்புகிறேன். அணிக்கு நான் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும். அது சதமாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

ரசிகர்கள் நான் அதிரடியாக விளையாட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் செலவழிப்பதே அதிரடி ஆட்டத்தை பார்க்கதான். ஆனால் அது எல்லா நேரமும் நடப்பதில்லை. நான் ரசிகர்கள் மகிழ்ச்சி படுத்துவே முயற்சி செய்வேன்.

நடப்பு சாம்பியனான நாங்கள் கோப்பையை தக்க வைத்து கொள்ளவே இங்கு வந்து இருக்கிறோம். ஆனால் அது எளிதானது கிடையாது. அதற்கான சவாலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

2007–ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் முதல் போட்டியில் கிறிஸ் கெய்ல் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் அடித்தார். ஆனால் அந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் தோற்றது.

0 comments:

Post a Comment

Copyright © 2013 TAMIL SPORTS NEWS | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com